A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

20 Aug 2012

எம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி


ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி.

ஈழத்துச் சிறுகதைகள் என்பதால் பதுங்குக்குழிகள், இயக்கம், பெடியள் எனும் வார்த்தைகள் புத்தகம் நெடுக நம்மோடு பயணிக்கின்றன. டக்ளஸ், பரிதி, ஜெயவர்தனா போன்ற கதாபாத்திரங்களும் தான். மேலும் இவை கதைகளின் நம்பகத் தன்மையையும் அதிகரிப்பனவாகவும் இருக்கின்றன. எம்.பி கொல்லப்படுவதிலிருந்து, அருகிலிருந்து பயணம் செய்பவனையும் இயக்கத்து ஆளாகக்காணும் சந்தேகத்தன்மை வரை எழுத்தில் ஈழத்துச் சூழல் விரிகிறது.

கதைகள் அனைத்துமே அடர்த்தியானவை ஆனால் ஆழமானவை. மனைவியையும் குழந்தையையும் விரட்டி விட்டு, விரும்பிய பெண்ணை அனுபவித்தலும், பின்னர் அவளைக் கொன்று விட்டு, இயக்கத்தினரால் அவள் கொல்லப்பட்டதாக நிரூபிக்கும் குரூரத்தினைச் சொல்லி, எந்தத் தவறாகினும் அது முதலில் இயக்கத்தினரின் மேல்தான் சந்தேகத்தைத் தரும் என்னும் மனப்பாங்கைச் சுட்டியிருக்கிறார். போர்னோகிராபியில் நடிக்கும் கதாநாயகிக்கு “ஜாஸ்மின்” என்பவளின் கதைக்கு “ரம்ழான்” என்று பெயர் சூட்டி சம்பிரதாயங்களைக் கிண்டலடித்திருக்கிறார். எல்லா விளம்பரங்களிலும் தேவையில்லாமல் அரைகுறை ஆடையுடன் பெண்கள் வருவதைப் பற்றி வேறோர் கதையில் நக்கலடித்திருக்கிறார். களம் தீவிரமானது என்றாலும், கதைகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. ஒரே பெயருள்ள இருவர் சேர்ந்தாற்போல் உருப்படாமல் போவது பற்றிய கதை முழுவதுமே காமெடிதான்.

உடனிருப்பவர் மரணத்தைக் கூட சாதாரணமாகக் கடந்து செல்லும் மக்களின் மனநிலையை, பயங்கரத்தை, அதிர்ச்சியை வாசிக்கும் பொழுதுகளில் சாதாரண நிகழ்வுகள் கூட எழுத்தில் அசாதாரணமாகத் தோன்றுவது போலான பிரம்மை ஏற்படுகிறது. உயிருக்கு பயந்து பாரீஸ், லண்டன் என தப்பிப் போய் பிழைக்கும் மக்களைப் பற்றியும் கூட சொல்லியிருக்கிறார்.

ஈழத்துக் கதைகள் என்றால் கவர்ச்சியும், ஆபாசமும் நிறைந்திருக்கவேண்டும் எனும் டெம்ப்ளேட்டிற்கு ஷோபா சக்தியும் விதிவிலக்கல்ல. சில கதைகளில் அங்கங்கு தூவப்பட்டிருக்கும் காமம் கதையின் போக்கிற்கு உதவுவதாய்த் தானிருக்கிறது. ஆனால் தமிழ் எனும் ஒரு கதை ஒரு விபச்சாரியின் மரணத்தில் தொடங்கி அதை பார்ப்பவன் பார்வையில் விபச்சாரத்தைப் பற்றியும் அவன் தன் அனுபவங்களைச் சொல்வதுமாய் இருக்கிறது.

மேற்படி, இக்கதைகளுக்கும் எம்.ஜி.ஆர்’ருக்கும் உள்ள தொடர்பு வாசித்தறிய வேண்டிய ஒன்று!

சிறுகதைத் தொகுப்பு | ஷோபா சக்தி | கருப்பு பிரதிகள் பதிப்பகம் | 2009 | விலை ரூ. 110



2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete

  2. நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...