A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Sept 2012

அனிதா இளம் மனைவி - சுஜாதா

...- சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்


குமுதத்தில் வந்த நைலான் கயிறு சுஜாதாவின் முதல் தொடர்கதை. சுஜாதா எழுதிய அடுத்த தொடர்கதை அனிதா. அன்றிருந்த எஸ்.ஏ பி குமுதம் அனிதா என்ற பெயரை "அனிதா - இளம் மனைவி" எனப் பெயரிட்டு வெளியிட்டது. கொலை - கொலையாளி யார்? இதுதான் கதைக்கரு. தமிழில் இதைப் போன்ற கதைகளை இறுதிவரை சுவை குறையாமலும், சஸ்பென்ஸுடனும் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் எவருமில்லை என நினைக்கிறேன்.
ஷர்மா - கொலை செய்யப்பட்டவர் - கடுமையான உழைப்பாளி.- ஏகப்பட்டச் சொத்து. 
அனிதா - ஷர்மாவின் 29 வயதான இளம் இரண்டாவது மனைவி. 

 மோனிக்கா - ஷர்மாவின் ஒரே மகள் - தன் அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்தவள் - ஹாஸ்டலில் வளர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறாள்.
பாஸ்கர் - ஷர்மாவின் செக்ரடரி 
கோவிந்த் -  விசுவாசமான வேலையாள் 
வசந்த் இல்லாத கணேஷ் - வக்கீல் 
ராஜேஷ் - அவ்வப்போது வந்து போகும் இன்ஸ்பெக்டர் 
காரில் கோவிந்துடன் 14 ஆயிரம் (அந்த காலகட்டத்தில் பெரிய பணம்) எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் ஏற்படும் விபத்தில் ஷர்மா இறந்து போகிறார். இறந்த உடலில் சாட்டையால் அடித்த குறிகள் இருக்கின்றன. இறந்தது ஷர்மாதான் என அவரது இளம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள்.  கோவிந்தின் உடல் சம்பவ இடத்தில் இல்லை, அவன் காணாமலும் போய் விடுகிறான். எனவே அவன்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறான் என எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், அது விபத்தல்ல கொலையாகவே இருக்கும், என போலீஸுக்கும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்தான் இந்தக் கேஸை எடுத்து நடத்துகிறார். 


தாமத தகவல் கிடைத்து ஷர்மாவின் முதல் மனைவிவழி மகள் மோனிக்கா இந்திய வருகிறாள். அவளுக்கு அனிதாவைப் பிடிக்கவில்லை. நாய்க்குட்டியை  செயினில் கட்டிப் போடுவது போல் அனிதா தன் அழகால் தன் தந்தையைக் கட்டிவைத்து  விட்டாள் என அவளுக்குக் கோபம். மோனிக்காவுக்கும் அவள் தந்தை மீது எந்த பாசமும் இல்லை. அவள் ஷர்மாவின் சொத்தில் தன் பங்கைப் பெற்றுச் செல்ல முயல்கிறாள். ஆனால் ஷர்மா எழுதிய உயிலில் உள்ள பிரச்னையை முன்னிட்டு வக்கீல் கணேஷை சந்திக்கிறாள். கணேஷும் ஷர்மாவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து  துப்பறியும் வேலையைத் தொடங்குகிறான். 
அனிதா, மோனிக்கா, பாஸ்கர் என எல்லோரையும் விசாரித்துப் பார்க்கிறான் கணேஷ். எல்லோருமே பொய் சொல்கிறார்கள். கணேஷுக்கு எல்லோர் மீதும் சந்தேகம். கோவிந்தும் கிடைத்தபாடில்லை. அனிதா மற்றும் ஷர்மாவின் அறைகளை சோதனை செய்கிறான் கணேஷ். எப்படியோ கோவிந்தின் ஒரு புகைப்படத்தை கண்டெடுக்கிறான். சாட்டையால் அடித்த காயங்கள் இருப்பதால் யாரோ ஷர்மாவைப் பழிவாங்கவே கொலை செய்திருக்கிறார்கள் என கணேஷ் நினைக்கிறான். அனிதாவின் இளமை மற்றும் கொள்ளை கொள்ளும் அழகும் அவளது பாத்திரப்படைப்புக்கு உயிரூட்டி இந்தக் கதையில் ஒரு முக்கியமான முடிச்சுக்குக் காரணமாக இருக்கின்றது. கணவனின் சொத்தே தனக்குத் தேவையில்லை, நிம்மதிதான் முக்கியம் என மிக அதிகப்படியாகவே அனிதா சொல்வதால் அவள் மீது சந்தேகம் வலுக்கிறது. 
கணேஷுக்கு இந்த விவகாரத்தில் இருந்து விலகும்படி மிரட்டல் வருகிறது. பாஸ்கர் மீது சந்தேகமுற்று அவன் வீட்டுக்குச் செல்லும் கணேஷ் அங்கு பாஸ்கரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எதுவும் புரியாத புதிராக இருக்கிறது. இதை அனிதாவிடம் தெரிவிக்க கணேஷ் தொலைபேசும்போது அனிதா தனக்கு பயமாக இருப்பதாகவும், அவனிடம் எல்லா உண்மையையும் சொல்வதாகவும் கூறுகிறாள். அவள் வீட்டிற்கு வந்தால் அங்கு அனிதா இல்லை தொலைபேசி மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணேஷ் இறுதியில்  கொலையாளியைக் கண்டு பிடிக்கிறான். அது ஒரு எதிர்பாராத முடிவு, கணேஷுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.
சுஜாதாவின் எழுத்திலிருந்து சில வரிகள்:
"அனிதா அந்த அறையில் பாடிக் கொண்டிருந்தாள். சந்தன மணமும் ஷவரிலிருந்து பெருகும் இதமான வென்னீரும் மிக மென்மையான பதிந்த கற்களும், மிக மெதுவாக அவள் தன உடலைத் திரும்பித் திரும்பிச் சுடுநீரின் தொடுகையில் ஓர் அரை மயக்கத்தில் பாடிக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் துளிகள் அவள் உடம்பின் வளைவுகளில் சரிந்தன நேர்பட்டன தழைந்தன சொட்டின." 

சுஜாதாவின் இந்த வர்ணனைக்கு ஜெ. படம் வரைந்தால் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!.
சுஜாதா எழுதியவற்றில் மிகச்சிறந்த கதை இது எனக் கூறமுடியாது. அவரது நடைதான் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.  விஷுவல் ரைட்டிங்கை மிகச் சரளமாகக் கையாள்பவர் சுஜாதா. டெல்லியைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்திராகாந்தி, அந்தக்கால டெல்லியின் அமைப்பு, M.D. ராமநாதன் சௌக்க காலத்தில் வானொலியில் பாடுவது என சமகால நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிக் கொண்டு செல்கின்றன. இன்றைக்கு சுஜாதாவைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு என் இளமைக் காலத்தில் சுற்றித் திரிவது போல இருக்கிறது.  


அனிதா இளம் மனைவி - சுஜாதா
புனைவு, நாவல்
160 பக்கங்கள், விலை 90 ரூபாய்
இணையம் மூலமாக வாங்க: கிழக்கு

4 comments:

  1. ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.

    ‘இது எப்படி இருக்கு’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘அனிதா – இளம் மனைவி’ என்ற பெயரிலேயே எடுத்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் கூடுதலான நாட்கள் ஓடியிருக்கும். அட்லீஸ்ட் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களையாவது டைட்டில் இழுத்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் சற்று அதிகமாகவே ‘ரஜினி, இளையராஜா’ பித்துப்பிடித்து அலைந்தார் பஞ்சு அருணாச்சலம் என்பது உண்மை.

    இந்தப் படத்தை பற்றி சொல்ல நிறைய விஷ்யம் இருந்தாலும், இதைப்பற்றி ராணி பத்திரிக்கையில் படித்த துணுக்கு ஞாபகம் வருகிறது இதழ் (25.12.77)

    “இது எப்படி இருக்கு?”
    ரஜினிகாந்தினால் புகழ் பெற்று விட்ட இந்த வசனம், இப்போது ஒரு படத்தின் பெயர் ஆகிவிட்டது. ஜெய்சங்கரும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடிக்கிறார்கள் . இந்தப் படத்தை விஜயமீனா பிலிம்சார் தயாரிக்கிறார்கள்.
    டைரக்சன்: பட்டாபிராமன்.

    “இது எப்படி இருக்கு?” படத்திற்கும் பார்த்திபன் கனவு படத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் கஷ்டப்பட்டு பார்க்கலாம்.

    பார்த்திபன் கனவு வெளியான போது அது தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது. கல்கி எழுதி தொடராக வந்தபோது பல்லவர்களின் எதிரியான சோழமன்னனின் மகனுக்கு ஒரு சாமியார் கதை முழுக்க உதவி செய்வார். அந்த சாமியார் ஒரிஜினல் சாமியார் அல்ல என்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் யார் என்பது சஸ்பென்ஸ். இந்த சஸ்பென்ஸ் கதைமுடியும் போதுதான் உடையும். திரைப் படத்தில் இந்த பூடகம் முதலிலேயே கிழிந்து போய்விடும். பல்லவ மன்னராக வரும் ரங்காராவ் சாமியார் வேடத்தில் வந்த உடனேயே இரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காலி!. நாவலின் முக்கிய நீரோட்டமே படத்தில் காலி!, எனவே படமும் காலி!.

    இதே போல் இது எப்படி இருக்கு படத்திலும் நடந்தது. இளம் மனைவியின் வயதான கணவரான தொழில் அதிபர் கொலை செய்யப் படுகிறார். அவரைக் கொலை செய்தது யார் என்பதுதான் சஸ்பென்ஸ். கடைசியில் கிளைமாக்ஸில்தான் கொலையுண்டது தொழில் அதிபரின் வேலைக்காரன் அவரைக் கொலை செய்ததே தொழில் அதிபர்தான் என்ற உண்மை தெரியவரும். படத்தில் தொழில் அதிபரான மேஜர் உயிரோடு இருப்பது ரசிகர்களுக்குத் தெரிந்து தேமே என்றே படம் பார்த்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் முன்னமே உடைந்து படம் ஒரு பிடிப்பே இல்லாமல் ஊறும்.

    இதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று அப்போது யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. தோல்விக்கு காரணம் ஜெய்சங்கர் சீசன் முடிவுக்கு வந்து கொண்டு இருந்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க பால்ஹனுமான்,
    தங்கள் வரவு நல்வரவாகுக. டீட்டெயில்டா நீங்க எழுதின பின்னூட்டம் மகிழ்ச்சி தருது. உங்க சுஜாதா மீதான அன்பு அதில் நிச்சயம் வழியுது.

    ரொம்ப சந்தோஷம் தகவல்களுக்கு. இந்தப் பின்னூட்டம், இன்ஃபாக்ட், தனிப் பதிவாவே வரத் தகுதியிருக்கு.

    மீண்டும் நன்றிகள்

    ReplyDelete
  3. பை தி வே, அனிதாவின் காதல்கள் வேறே கதையில்லையோ. எனக்கு எப்பவுமே ஒரு கன்ஃபூஷன் :))

    ReplyDelete
  4. உண்மை தான் கிரி. இந்தப் பதிவு அனிதா - இளம் மனைவி பற்றியது..

    அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.

    அனிதாவின் காதல்கள் - கதையும் சுஜாதா எழுதியது தான்...

    ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள், மன சஞ்சலங்களை விவரிக்கும் வசீகர நாவல்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...