A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

28 Dec 2012

நேர் நேர் தேமா by கோபிநாத்



நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 192
விலை: ரூ.100

***

சென்ற மாதம் சென்னை தி.நகர் புக் லேண்ட்ஸ் புத்தக நிலையத்திற்கு சென்றபோது கண்ட காட்சி. சமீபத்தில் வெளியான இன்னொரு தமிழில் தலைசிறந்த கவிஞருடைய பிரபல புத்தகத்தை விட / வேறெந்த புத்தகத்தையும் விட, ‘நேர் நேர் தேமா’ என்கிற இந்த புத்தகத்திற்கே ஏராளமான போஸ்டர். சுவரெங்கும் கோபிநாத். அப்படி என்னதான் இருக்கு இதில்னு பார்த்துடலாம்னு வாங்கிய புத்தகமே இது. ’சிகரம் தொட்ட மனிதர்கள்’  - விஜய் டிவியில் வந்து கொண்டிருந்த இந்தத் தொடருக்காக திரைப்படம், தொழில், கலை, அரசியல் என்று பல துறைகளிலிருந்தும் முக்கியமானவர்களை பேட்டி கண்டிருந்தார் கோபிநாத். (அந்தத் தொடரில் நான் பார்த்த ஒரே ஒரு பகுதி - நம்ம சுஜாதாவுடையது). அந்தத் தொடரே எழுத்துவடிவமாக (சுருக்கமாக) இந்தப் புத்தகத்தில் வந்துள்ளது. மொத்தம் 21 பேர், அவர்களது பேட்டி, அந்த பேட்டியில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளார். சாதனையாளர்களைப் பற்றியும், அவர்களது வெற்றி ரகசியத்தைப் பற்றியும் அறிவதும் நல்லதுதானே? புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். 


இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலமாக உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெல்லாம் உறுதி தருவதற்கில்லை. தங்களை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்தப் புத்தகம் சில முன்னுதாரணங்களை சொல்லக் கூடும் என்கிறார் முன்னுரையில் கோபிநாத்.

வைரமுத்து

வைரமுத்துவிடம் தான் அவரின் ரசிகன், அவரது படைப்புகளை நிறைய வாசித்துள்ளேன் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கோபிநாத் விரும்பினாலும், அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம் இருந்ததாம். அதனால் எதுவும் சொல்லாமல், பேட்டி மட்டும் எடுத்துவிடலாம் என்று எண்ணியபோது, வைரமுத்துவே முன்வந்து தான் கோபிநாத்தின் ரசிகர், இவர் செய்தியாளராக இருந்ததிலிருந்து பார்த்து, அவரது தமிழை ரசித்து வருவதாகவும் சொல்லியது மிகவும் ஆனந்த அதிர்ச்சியளித்தது என்கிறார். ஒரு பிரபலம் நம்மை அடையாளம் கண்டு வாழ்த்தினால் அதைவிட மிகப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும்? ”என் சக்தி இவ்வளவுதான் என்று ஏன் திட்டமிட வேண்டும்? ஏன் நம்மை நாமே குறுக்கிக் கொள்ள வேண்டும்? என் சக்தியின் அளவு இவ்வளவுதான் என்று முடிவு செய்ய நாம் யார்?” - வைரமுத்துவின் இந்த வார்த்தைகள் தன்னம்பிக்கையற்று இருக்கும் மனிதர்களுக்கு ஒரு உற்சாக டானிக்.

நல்லி குப்புசாமி செட்டியார்

Service Management என்று இப்போது ஒரு பாடத்தையே வைத்து, அதில் சான்றளிப்பெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் அதையெல்லாம் படிக்காமலேயே, ‘வாடிக்கையாளர்தான் தெய்வம்’ என்று சொல்லி, அதை பின்பற்றி வந்து, தம் தொழிலில் வென்றுள்ளனர். மிதிவண்டியில் சென்று புடவைகைளை விற்று, இன்று ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவினாலும், இன்னும் வாடிக்கையாளரை மதிக்கும் பண்பை ஒரு உதாரணத்தில் சொல்கிறார். கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தன்னை அங்கிருக்கும் விற்பனையாளர் சரியாக கவனிக்கவில்லையென்று திரும்பிப் போக, நல்லி அவர்கள், அவர் வீட்டிற்கே சென்று இனிமேல் அப்படி நடக்காது என்று மன்னிப்பு கேட்டு, அவரை மறுபடி கடைக்குக் கூட்டி வந்தாராம். நிலையான வாடிக்கையாளர்கள் கிடைக்கும் ரகசியம் இதுதானே?

பி.டி.உஷா

எந்தவொரு வசதி வாய்ப்பும் இல்லாமல், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ்வரை சென்று வந்த பி.டி.உஷாவின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை பாடம். ’ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவைப்படுகிற வசதிகள் அவசியம் வேண்டும். அது இருந்தா மட்டும் போதாது. ஜெயிச்சே ஆகணுங்கற உறுதி மனசுக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கணும்’ என்கிற அவரது இந்த வார்த்தைகள் வசதிகள் இன்றிப் போராடும் வீரர்களுக்கு கண்டிப்பாக உற்சாகம் தரும்.

பத்மா சுப்ரமணியம்

டென்னிஸ் விளையாட ஆசை; ஆனால் விளையாடினால் பரதத்தின் லாவகம் வராது. ஆகவே டென்னிஸை துறந்தேன். பழைய சாதம் சாப்பிட ஆசை; ஆனால் சாப்பிட்டால் நாட்டியம் ஆட முடியாது என்றார்கள். ஆகவே அதையும் துறந்தேன். இப்படி சிற்சில விஷயங்கள் பலவற்றை துறந்தே என் பெரிய ஆசையான பரதத்தை பயின்றேன் - என்கிறார் பத்மா சுப்ரமணியம். 1956ல் அரங்கேற்றம் நடத்தியதிலிருந்து திருமணம்கூட செய்துகொள்ளாமல் இன்றுவரை பரதத்திற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பத்மா, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு சொல்லும் அறிவுரை மிகவும் அருமை. ‘தடுமாற்றம் இல்லாத குறிக்கோள் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம், நம் கலாச்சாரத்திற்கு ஒரு விலாசம் இருக்கிறது. அது நம் அடையாளம். அது குறித்து நமது வளரும் கலைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும்’.

கலைஞர் கருணாநிதி

புத்தகத்தின் ஹைலைட்டாக இவரது பேட்டியை சொல்லலாம். அவரது அரசியல் மேல் எந்தவிதமான விமர்சனமாக இருந்தாலும், அவரது உழைப்பு பற்றி யாருமே வியக்காமல் இருக்கமுடியாது. அதையே கோபிநாத்தும் கலைஞரிடம் கேட்கிறார். அதற்கு கலைஞரின் பதில், அனைவரும் குறித்துவைத்து தினந்தோறும் பார்த்து வரவேண்டியதாகும். ‘இருக்கிற நேரத்தைத்தான் பயன்படுத்திக் கொள்கிறேன். அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறேன். ஓய்வு என்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்திலும் உழைக்க வேண்டும் என்று கருதுகிறேன். உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு அதுவே என் முன்னேற்றத்திற்குக் காரணம்’. இது அறிஞர் அண்ணா கலைஞரைக் குறித்து சொன்னதாம். 

வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும் சேர்ந்தால் நிச்சயமாக தமிழ்ச்சமுதாயம் சிகரத்தைத் தொடும் - என்று முடிக்கிறார் கலைஞர்.

இவர்களைத் தவிர இன்னும் பல பிரபலங்கள், அவர்களோடு பேட்டியெடுத்த கோபிநாத்தின் அனுபவங்கள் அனைத்தும் சுவாரசியம். படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

***


1 comment:

  1. தகவல் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...