A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

17 Mar 2013

THE JAPANESE WIFE -KUNAL BASU

 THE JAPANESE WIFE
KUNAL BASU
SHORT STORIES
HarperCollins Publishers India

Photo Courtesy/To Buy: Flipkart



சில வருடங்கள் முன்பு “The Japanese Wife” என்றொரு திரைப்படம் வெளிவந்தது, எவ்வளவோ படங்கள் வருகின்றன. எல்லா படங்களையும் நினைவு வைத்துக் கொள்வது கடினம்தான். ஆனால் இந்தப் படம் இந்தியாவின் முக்கிய இயக்குனரான அபர்ணா சென்னால் இயக்கப்பட்டது. அதைவிட முக்கியமான விஷயம் இதனுடைய கதைக்கருதான். 

பேனா நண்பர்களான ஒரு ஆணும் பெண்ணும், தங்கள் கடிதங்கள் மூலமே பழகி, திருமணம் செய்து கொண்டு இருபது வருடங்களாக வாழ்க்கை நடத்துக்கின்றனர். இதுதான் நான் இந்தப் படத்தை பற்றி படித்தது, இன்னமும் பார்க்கவில்லை.  நூலகத்தில் என்ன புத்தகம் எடுக்கலாம் என்று சுற்றி வந்தபோது, இது கண்ணில் படவே சட்டென எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வந்து புத்தகத்தைப் பிரித்து உள்ளடக்கம் பார்த்தப்போதுதான் திரைப்படமாக கதை ஒரு சிறுகதை என்பதை அறிந்தேன்.

இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். முதலில் இந்தக் கதைகளை எழுதின ஆசிரியரை பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர், நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். அதன் தாக்கத்தை இவரது சிறுகதைகளில் காணலாம். இவரது கதைமாந்தர்கள் இந்தியாவை மட்டும் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. உலகத்தின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால் இவரது சிறுகதைகளை ஆங்கிலத்தில் “truly global” என்றும் சொல்லலாம். இவரது சிறுகதைகளின் மாந்தர்கள் ஆகட்டும் வாசகர்கள் ஆகிய நாம் ஆகட்டும், எதோ ஒரு புதிய விஷயத்தை கண்டடைந்து கொண்டே வருகின்றனர்.

இந்தச் சிறுகதை தொகுப்பின் முதல் கதையான “The Japanese Wife” தலைசிறந்த ஒரு கதையாகும். பேனா நண்பர்களான மியாகே (miyage)- ஷேனாமொய் (shenamoy) கடிதம் மூலம் மணம் செய்து கொண்டு, கடிதம் மூலம் மணவாழ்க்கையை நடத்துகின்றனர். தான் செய்துவிட்ட ஒரு சிறு தவறு அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவள் மரண படுக்கையில் இருக்கிறாள். அவன் தான் செய்த தவற்றை ஒத்துக் கொண்டு அவளுக்கு கடிதம் எழுதுகிறான். அடுத்து வீசுகின்ற புயலில் மரணம் அடைகிறான். இத்தனை நாட்களாக சந்திக்க வேண்டும் என்று காத்திருந்த அவன் மனைவி, வெள்ளையாடை - மொட்டை தலையுடன் அவன் நினைவிடத்துக்குச் செல்வதுடன் கதை முடிவடைகிறது.

Grateful Gangaவில் உண்மையான விடுதலையை ராக் இசை மூலம் கண்டடையும் கணவனை போதை மருந்துக்கு பலி கொடுத்து விட்டு அவனது அஸ்தியை கங்கையில் கரைக்க வரும் எவெலின், விமானத்தில் யோகிந்தரை சந்திக்கிறாள். யோகிந்தரின் மூலம் தனது மற்றொரு விடுதலையை எப்படி கண்டெடுக்கிறாள் என்பது கதை. ராக் இசையின் மூலமும், கிஷோர் குமாரின் ஹிந்தி பாடல்கள் மூலமும் கதையை நகர்த்தி செல்கிறார் குணால் பாசு.

Lenin’s Cafe, ஒரு Fantasy கதை, லெனின் ஸ்விஸ் நாட்டின் ஜுரிச் நகரத்தின் ஒரு காபி கடையில் தினமும் காபி அருந்துவார். கம்யுனிசத்தில் ஊறிய தந்தையும் மகளும் அதே காப்பி கடையில் லெனின் சம்பந்தமாக, பழைய சம்பவங்களை நினைவு கூர்கின்றனர். அப்போது லெனினின் கம்யுனிச தோல்வியை வெயிட்டர் (waiter) தனது பாத்திரங்களைத் தவறவிட்டு உணர்த்துகிறார்.

Lotus-Dragon, இந்த தொகுப்பில் இன்னொரு முக்கியமான சிறுகதை, இந்த கதை சீனாவில் தோல்வியடைந்த ஜனநாயக போராட்டங்களின்போது அங்கு ஹனிமூன் கொண்டாடச் செல்லும் இந்திய தம்பதிகள் பற்றிய கதை. கதையில் இந்த போராட்டங்கள் தோல்வி அடையும் அதே சமயத்தில், அந்த பெண்ணும் மூளை கட்டியால் இறப்பதன் மூலம் சரி செய்ய முடியாத சீன ஜனநாயகத்தை கண் முன் நிறுத்துகிறார்.

Snake Charmer கதையில் மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு, அவள் வந்த பாலைவனத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு இந்தியா வரும் இஸ்ரேலி ஒருவர், ஒரு சிறு பெண்ணின் கண் அசைவில் தன் தற்கொலை முடிவை மாற்றி கொள்கிறார் என்பதைப் பேசுகிறது.

Long Live Imelda Marcos ஹாங்காங்கில் குடியேறும் ஒரு தம்பதியின் வீட்டில் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் பெண்ணை பற்றி பேசுகிறது. அவள் ஒரு இந்தியனைக் காதலிக்க, அவன் குஜராத் கலவரத்தில் மடிய, அதைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முடிவு கதையை நடத்திச் செல்கிறது.

Tiger, Tiger! சுந்தர்பன் காடுகளில் வெள்ளை புலிகளைக் கொன்று அதை விற்பவன், அவன் மனைவி , காட்டு இலாகா அதிகாரி, இதை ஆராய்ச்சி செய்ய வரும் வெளிநாட்டு பெண், இந்த நால்வருக்குள் நடக்கும் கதை. ”Father Tito’s Onion Rings” ஒரு பாதிரியாருக்கும் ஒரு விலைமாதுவின் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சி. Miss Annie, கதையில் ரஷ்யாவிலிருந்து விலைமாதுவாக வங்காளம் வரும் பெண், இங்கு நாடகங்களிலும் நடிக்கிறாள். தன்னுடைய சுயத்தை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதைப் பேசுகிறது..”The Last Dalang” கதையில் இந்தோனேசியாவில், ராமாயணத்தை பொம்மைகள் கொண்டு நாடகம் போடும் ஒருவரைப் பற்றிச் சொல்கிறது.

முன்னமே சொன்ன மாதிரி ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான ஒரு கரு. ஒவ்வொன்றையும் படிக்கும்போது ஒவ்வொரு விதமான அனுபவத்தை கிடைக்கின்றது. சில இடங்களில் ஆசிரியரின் வங்காள சாயல் அதிகமாகத் தெரிவதை தவிர்த்து விட்டால் இது ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு.
                                              







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...