A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

6 Mar 2013

Voices Within - Bombay Jayashri & T M Krishna with Mythili Chandrasekar

 சிறப்புப் பதிவர்: இலவசக் கொத்தனார் (@elavasam)
 
Coffee Table Book என்றாலே உடனே என்ன தோன்றும்? வழவழத் தாளில் படங்கள், அங்கும் இங்குமாய் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள், கெட்டியான அட்டை, தூக்க முடியாத எடை, நட்சத்திர ஹோட்டல் அல்லது பெரும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும், யாரும் படிக்க மாட்டார்கள். இதுதானே நினைவுக்கு வரும். எதோ இயற்கை காட்சிகள் என்றால் படமாவது பார்க்கும்படியாக இருக்கும் ஆனால் இசை பற்றிய அதுவும் பாரம்பரிய இசை பற்றிய புத்தகம் என்றால்?
 
பார்க்கலாம், படிக்கலாம், பிரமிக்கலாம், சேமிக்கலாம், இன்னும் பல -லாம்கள் போடலாம். கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும், விளம்பர உலகில் புகழ் பெற்று விளங்கும் மைதிலி சந்திரசேகருடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் Voices Within என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு விமர்சனம்தான் அது. படங்கள், வழவழ பக்கங்கள், கெட்டி அட்டை, ஒற்றைக் கையால் தூக்க முடியாத எடை என்ற சம்பிராதயமான விஷயங்கள் எதிலும் குறை வைக்காமல் இருந்தாலும் சுவாரசிய தகவல்களையும் சம்பவங்களையும் அள்ளித் தெளித்து கையில் எடுத்தபின் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாமல் செய்தது வித்தியாசம்தான்.  
 
கர்நாடக சங்கீத உலகில் கோலோச்சிய ஏழு பிரபலங்களின் வாழ்க்கையை பற்றிய சிறு குறிப்பு வார்த்தைகளாவும் படங்களாகவும் இப்புத்தகத்தின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது வெறும் புத்தகம் அல்ல இவர்கள் ஏழு பேர்களுக்கும் எங்கள் வணக்கம் என்று முன்னுரையில் சொல்லப்பட்டு இருப்பது புத்தகத்தின் எல்லா பக்கத்திலும் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பின்பற்றப்பட்டு இருக்கிறது. சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்கள் தொடங்கி கர்நாடக சங்கீதத்தில் ஏழு என்ற எண்ணிற்கு எப்பொழுதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. அதை ஒட்டியே இவர்களும் ஏழு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கள் புகழ்மாலையாக இப்புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் இவ்விருவரும்.

யார் அந்த எழுவர்? எத்தனையோ பேர் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் மட்டும்? இக்கேள்விகளுக்கும் புத்தகத்திலேயே விடை இருக்கிறது. 
 
  •  அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - இன்றைய கச்சேரி முறையை அறிமுகப்படுத்தி கர்நாடக சங்கீதத்தை பெரும்பான்மையிடம் கொண்டு சேர்க்கும் அரிய காரியத்தைச் செய்தவர்.
  •  டி.என்.ராஜரத்தினம் பிள்ளை - நாகஸ்வர ராஜா. நாகஸ்வர வித்தையையும் தாண்டி நின்ற ஆளுமை. தனக்கான, தன் இசைக்கான இடத்தைப் பெற போராடத் தயங்காத போராளி.
  •  செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் - கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமகர். இசை தாண்டி பலவித ஒழுங்குமுறைகள் வரக் காரணமாக இருந்தவர்.
  •  ஜி.என்.பாலசுப்ரமணியம் - தேன் குரலோன். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதுவரை இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்.
  •  பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம் என்றால் மணி ஐயர். மணி ஐயர் என்றால் மிருதங்கம் என்ற அளவிற்கு திறமை கொண்டவர்.
  • எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி - இசைக்குயில். கர்நாடக சங்கீதத்தை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகமே அறியச் செய்தவர். நம் பாரதத்தின் ரத்தினம்.
  •  டி.ஆர்.மஹாலிங்கம் - புல்லாங்குழலுக்கென்றே பிறந்தவர். ஜீனியஸ். எந்த விதமான சட்டதிட்டங்களும் தம்மை பாதிக்காமல் இருந்த புரட்சியாளர்.
இவர்கள்தான் அந்த ஏழு பேர். ஒவ்வொரு கலைஞனுக்கும் 25 - 30 பக்கங்களில், அவரின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள், சம்பவங்கள், அவர்களின் கலை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என்று கலவையாகத் தொகுத்து எழுதப்பட்ட பக்கங்கள். இதற்குத் துணையாக அரிய கருப்பு வெள்ளை படங்கள் என்று அமர்க்களமாய் செய்திருக்கின்றார்கள்.

மூத்த கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயருக்கு பதிலாக களமிறங்கிய சின்ன வயது ஜிஎன்பியின் கச்சேரியை விவரிக்கும் விதமாகட்டும், அரியக்குடி காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை அவருடைய நாள் ஒன்றை விவரிக்கும் விதமாகட்டும் நாமும் அவர்கள் கூடவே இருப்பது போன்ற விவரிப்பு. எனக்கு குழலை விட வயலின் நன்றாக வரும் எனச் சொல்லும் மாலி, என் கச்சேரிக்கு நேரம் நிர்ணயிக்க நீங்கள் யார் என்று ஆல் இந்திய ரேடியோவை கேள்வி கேட்ட பிள்ளைவாள், மற்றவர்களை விட தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் சன்மானம் தர வேண்டும் எனச் சொன்ன அரியக்குடி என்பது போன்ற சுவாரசியத்திற்கு குறைவில்லா தகவல்கள் நிறைந்த புத்தகம். வெறும் பெருமைகளை மட்டும் சொல்லாமல் அரியக்குடியின் கருமித்தனம், மாலியின் சூதாட்டம் என்று அவர்களை சாதாரண மனிதர்களாகவே சொல்லி இருப்பது எனக்குப் பிடித்தது.

ஆனால் Coffee Table Book என்பதால் தேடித்தேடித் தேர்ந்தெடுத்த படங்கள்தான் புத்தகத்தின் ஹைலைட். ராஜாவைப் போன்ற ராஜரத்தினம் பிள்ளை, ராஜா வேஷத்தில் சினிமாவில் நடித்த ஜிஎன்பி, செம்மங்குடியின் இளமை முதுமை காலப் படங்கள் என்று அற்புதமான படங்களோடு, 78ஆர்பிஎம் ரெக்கார்டுகளின் படங்கள், 1943ஆம் ஆண்டு அரியக்குடி பாடிய கச்சேரியின் பாட்டு லிஸ்ட்(ஹமாம் விளம்பரத்துடன்), எம்.எஸ் ஆங்கில உரை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு தயார் செய்கையில் சரியான உச்சரிப்புக்காக அதில் தமிழில் எழுதிக் கொண்ட படம் என வித்தியாசமான படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், கர்நாடக இசைக்கலைஞர்கள் பற்றி அத்துறை வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் புதிய முயற்சி என்பதே வாங்கிப் படிக்கவும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் போதுமான காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் ஒன்றும் வந்திருக்கிறது. அதை படித்துப் பார்க்கவில்லை என்பதால் மொழியாக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

Voices Within | Bombay Jayashri, TM Krishna | 188 Pages | Rs.1900 | http://www.matrka.org/voiceswithin/index.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...