A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

27 May 2013

காகித மலர்கள் - ஆதவன் - 1977

சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா

எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல் அல்ல (நன்றி: Snap Judgment

முன்னெச்சரிக்கை: முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முழுக்க முழுக்க ரசித்துச் சிலாகித்துப் படித்த புத்தகம் இது என்பதால் இந்தக் கதை பற்றி எதிர்மறையாக நான் ஒரே ஒரு எழுத்தையும் இங்கே எழுதப் போவதில்லை. முழுவதும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் என்று நான் எழுதியிருப்பது உங்களுக்கு ஒரேயடியாக போரடித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, ஆதவனே பொறுப்பு.

தைத் தலைப்புடன், ஆசிரியர் பெயருடன் கதை எழுதப்பட்ட வருடத்தையும் மேலே குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், விமர்சனம் படிப்பவர்கள் தற்போதைய காலகட்டத்தில் வெளிவந்த நாவல் இது எனக் கருதி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஒற்றை வரியில் சொல்வதானால் டில்லியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மதிப்பீடுதான் கதை.

வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று சகோதரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத நபர்கள் என இவர்களைச் சுற்றியே கதை வளைய வருகிறது. நாகரிகம் என்னும் பெயரால் ஒவ்வொருவரும் (பாத்திரங்கள்) செய்யும் பாசாங்குகள், அவை அவர்களுக்குத் தரும் திருப்தி அல்லது சலிப்பு, நாகரிக வாழ்க்கை குறித்த அவர்களது மதிப்பீடுகள் இவையே கதையின் மைய இழையாக இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சேதன் பகத் எழுதிய ‘one night at call centre"ன் சில காட்சிகளை 77’ல் வெளிவந்த இந்தக் கதையின் காட்சிகளோடு (கதை, கதாபாத்திரங்களோடு அல்ல) ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக...பெண்கள் ரெஸ்டரண்டில் பீடி பிடிப்பது.... ஓ! ஸாரி.. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, pre-marital sex (தமிழில் எழுத கூச்சமாயிருக்கு போங்கப்பா :) ).

இவையெல்லாம் அப்போதே... அந்த 70’களிலேவா? (அப்பாடா! டில்லியில்தான்). ஆனால் பாருங்கள், ஆதவன் இவ்விஷயங்களைக் கையாண்டிருக்கும் விதத்தால் மக்கள் யாரும் அவரை சேதன் பகத் அளவிற்கு எதிர்த்து அல்லது ஆதரித்துப் பிரபலம் ஆக்கவில்லை போலும்.

டில்லி மாநகரின் இடங்களை விவரிப்பதில் மாநகருடன் கதாசிரியருக்கு இருக்கும் பரிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சுஜாதாவின் சில கதைகளைப் படித்தால் பெங்களூருவின் கீ-ப்ளான் உங்களுக்குக் கிடைக்கும்)


மனோதத்துவ நிபுணர் போல் கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள்; சமூக அக்கறை கொண்ட விஞ்ஞானி போல் செயற்கை உரங்கள், அதன் தொழிற்சாலைகளால் மண்ணுக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் கேடுகள்; ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என ஆதவனின் ஆல்-ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் கதையை ரசிக்க முடிகிறது.

அரசாங்க அலுவலகத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் அனைவரது செயல்பாடுகள் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், புறக்கணிப்பு என விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆதவன். பல்வேறு துறைகள் பற்றி, விஷயங்களைப் பற்றி கதாபாத்திரங்களின் விவாதங்கள்  சிந்தனைகள் மூலம் தம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் படிக்கும்போது பல்வேறு துறைகளைப் பற்றிய கதாசிரியரின் ஆழ்ந்த ஞானம் நம்மை நிச்சயம் வியக்க வைக்கிறது என்றால்; இதில் எங்கும் தன் சிந்தனைகளை, யாரோ இருவரின் சம்பாஷனை அல்லது விவாதம் வழியே நம் மீது வலிந்து திணிக்காமல் கதையோட்டத்தோடே கொண்டு செல்லும், சொல்லும் பாங்கில் ஆதவனின்... மேதைமை என்றழைக்கலாமா அந்த பண்பை... அது நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் பிடித்த சிந்தனையைத் தூண்டும் வரிகளை அடிக்கோடிட்டு திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் அடிக்கோடிட வேண்டும் என்று ஆரம்பித்தால் சில இடங்களில் பக்கம் பக்கமாக (முழுப்பக்கங்களையும்) அடிக்கோடிடும் அவசியம் ஏற்படும்.  Random-ஆக பிரித்து ஒரு பக்கத்திலிருந்து நான்கு வரிகளும் அதிக பட்சம் பக்கம் முழுவதையும் select செய்யலாம்.

என்னைப் பொருத்தவரையில் லைப்ரரியில் எடுத்த புத்தகம் இது என்பதால், அடிக்கோடிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் புத்தகம் வாசித்து முடித்த பின் மேலே சொன்ன அதே random முறையில் புத்தகத்தை book cricket விளையாடும் பாங்கில் அங்கங்கே பிரித்த இடத்தில் பிடித்த வரிகளைக் குறிப்பிடுகிறேன்.

பெண் சிந்தனையால் அணுகப்பட வேண்டியவள்...... சிந்தனைக்கு முதலில் விடுதலையளித்து விட வேண்டும். அவள் உருவாக்குகிற பிரமைகளில் ஏமாறும் முட்டாளாக வேண்டும். புலப்படாதவை புலப்படுவது போலவும், புலப்படுவது புலப்படாதது போலவும் பாசாங்கு செய்ய வேண்டும். 
இயற்கையின், சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம்தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாக்க முயல்கிறான்.
ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்திற்கு அந்தந்த சாரார் பொறுப்பாளி என்பது உண்மையோ இல்லையோ! ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை 

வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முடிவிற்காக வெவ்வேறு விதமான முடிவுகளை ஒரே சமயத்தில் ஏற்படுமாறு முடித்திருக்கிறார் ஆதவன். எனினும், அந்த முடிவு அத்தியாயம் எழுதிய விதத்தில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். 

காகித மலர்கள் | ஆதவன் | உயிர்மை | இணையம் மூலம் வாங்க: உயிர்மை


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...